Posts

Showing posts from April, 2020
Image
விழித்திரு பொழுதுகளெல்லாம் பெரும் பதற்றத்திலிருக்கின்றன அடுத்த கணத்தில் எத்தனை உயிர்கள் மடியுமோ எதிர்காலத்தை இறுக பற்றியிருக்கிறது அவநம்பிக்கை யாவரின் இதயமும் வழமையைவிட அதி வேகமாய்த் துடிக்கிறது அவளை மீண்டுமொருமுறைப் பார்க்க முடியுமா அவளுக்கான காதலை முத்தங்களில் சொல்ல இயலுமா இந்தத் துயர்மிகு காலத்தில் அவளை அணைத்து  ஆறுதல் சொல்ல வழிகள் இருந்தும் மூடப்பட்டுவிட்டன அவள் கண்ணீர்க்குரல் சிதைத்துவிட்டது ஆழமாய் தொடுவுணர்வின்றி வெற்றுச் சொற்களால் என்ன செய்துவிட முடியும் சுவர்களுக்கிடையே அவள் ஞாபகம் கொல்லத் தொடங்கிவிட்டது ஆயிரமாயிரம் மனிதர்கள் செத்துவிழும் காலத்தில்  நீ பயந்துபோயிருக்கிறாய் உனக்கான பிரார்த்தனையில் நீ நலம் பெற்றிருக்கிறாய் அமையிதியில் விழித்திரு உன் கதவுகளைத் திறந்து அப்படியே வாரிக்கொள்வேன் அன்பே.
Image
இருட்டைக்கொண்டு ஒளியேற்றுகிறார்கள் நமக்கு வர வேண்டிய யாவும்  பறிபோய்க்கொண்டிருக்கின்றன சாத்தானின் கருணையில் மட்டுமே  நம் நிலத்தில் சாவுகள் நிகழாதிருக்கும் நம் வழிகளை நம்மைக் காப்பதாய்ச் சொல்பவர்களே  பெரும் பாறைகளைக்கொண்டு மூடத் தொடங்கிவிட்டார்கள் நம் காதுகளுக்கு நம் சவப்பெட்டிகள் செய்யும்  ஓசை கேட்கிறதில்லையா நம் வானின் நட்சத்திரங்கள்  திருடு போய்க்கொண்டிருப்பதை  எதிர்த்துக் கேட்க எவருமில்லை நம்மிடம் மீதமிருந்த நம்பிக்கைகள்  வெளிறிக்கொண்டு வருகின்றன நம் திசையை இருட்டைக்கொண்டு ஒளியேற்றுகிறார்கள் நம் கண்களில் இருள் மட்டுமே பாயத் தொடங்கிவிட்டது நாம் இசைக்கும் பாடல்களில்  மரணம் குறித்த அச்சம் ததும்புகிறது நாம் விடைபெறும் காலத்தில் அதோ அவர்கள் மட்டும் உயிரோடு இருக்கப் போவதாய்  கற்பனையில் மிதக்கிறார்கள்.
Image
காதலை என்னெவென்று சொல்வேன் நீயோ நானோ பார்த்துப் பேச முடியாத  இந்தப் பொழுதுகளில்  ஆகாயத்தில் ஒளிரும் நட்சத்திரங்களோடு  பேசத் தொடங்கினேன் யாவும் உன்னைப் பற்றியதாக இருந்தது அதில் உனக்கு கொடுக்கும் முத்தங்கள் எண்ணவே முடியாத நட்சத்திரங்கள் போல  இருந்ததாகச் சொன்னேன் இந்தக் கணமோ நீ அருகில் இல்லை எப்போது அருகே வருவாய் எனவும் சொல்வதற்கில்லை சேகரமாகும் உன் முத்தங்கள் வேதனையில் உழல்கின்றன பூட்டிய வீட்டைத் திறக்க முடியாமல்  மேலும் நாட்கள் நீட்டிப்பது யாரிட்ட சாபமோ உலகத்தின் ஒரு மூலையில் உயிர்கள் மடிந்துவரும்வேளை  உனக்கான முத்தங்களுடன் தவிக்கும்  என் காதலை என்னெவென்று சொல்வேன் கண்ணுக்குத் தெரியா நோய்மையும்  கண்ணுக்குத் தெரியா மனிதரும் நம் வாழ்வைச் சூறையாடுகிறார்கள் நம் பூட்டின் சாவிகள் நம்மிடமிருந்தும்  திறக்கும் வலிமையின்றிக் கிடக்கிறோம் வந்துபோகும் சூரியனைப்போல நாம் இருக்கப்போவதில்லை ஆயினும் வலுவிழந்து வரும்  உனக்கான முத்தங்களுடன் காத்திருப்பேன் அன்பே.
Image
என்னை அர்ப்பணித்துவிட்டேன் நீங்களெல்லாம் நிம்மதியில் இருக்கின்றீர்கள் நான் என் குழந்தையிடம் செல்ல முடிவதில்லை அவளுக்கான முத்தத்தையும் அணைப்பையும்  தவறவிட்டுக்கொண்டிருக்கிறேன ் என் கணவன் என் காதலின்றி முடங்கிக்கிடக்கிறான் நான் என்னை நம்பி வரும் உயிர்களைக்  காக்கப் போராடிக்கொண்டிருக்கிறேன் உயிர் போகும் பயத்திலிருப்பவர்களிடம் நம்பிக்கையைத் தூண்டுகிறேன் அவர்கள் நிலைகண்டுத் துடிக்கிறேன் அஞ்சுகிறேன் என்னுடல் வருத்தி மாய்ந்துபோகிறேன் என் தூக்கம் உங்கள் அக்கறையின்பால் மடிந்துவிட்டது என் விழிப்பில் உங்கள் மரணத்தை  வென்றுவிடப் பார்க்கிறேன் நீங்கள் உயிர்போய்விடும்  என துக்கத்தில் மூழ்கிவிடாதீர்கள் நான் உங்களை என் உயிர் மடியாதிருக்கும்வரை  உயிர்த்திருக்கச் செய்வேன் அதோ என்னைப் பார்க்கத் துடிக்கும்  என் குழந்தையின் அழுகுரல் கேட்கிறது என்னை அரவணைக்கத் தவிக்கும்  அவனின் கைகள் எனை நோக்கி நீள்வதை உணர்கிறேன் அவர்களுக்காய் என்னால் எதையும் தரவியலாத  இயலாமையில் வேதனையின் ஆழத்தில்  மரித்துப்போகிறேன் ஆயினும் என்ன என் முன் கதறும்  எண்ணற்ற உயிர்...
Image
வருகிறோம் பசிப்பவனுக்கு எதையும் கொடுத்துவிடாதீர்கள் அது சட்டத்திற்குப் புறம்பானது நாங்கள் என்ன சொல்கிறோமோ  அதுபோலத்தான் நீங்கள் செய்ய வேண்டும் பசித்தவனை எப்படி நடத்த வேண்டுமென்று  எங்களுக்குத் தெரியும் அதில் குறுக்கிடும் அதிகாரத்தை  உங்களுக்கு வழங்க முடியாது நாங்கள் சொல்வதுபோல முகக்கவசம் அணியுங்கள் வீட்டை விட்டு வெளியில் புழங்காதீர்கள் உங்கள் உயிர் எங்களுக்கு முக்கியம் தேர்தல் வரப்போகிறது பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் உங்களுக்கு வேண்டியதை வீட்டு வாசலில் தருவோம் உங்கள் கருணையை மூட்டை கட்டி ஓரமாய் வையுங்கள் பசித்தவனுக்கு நீங்கள் தருவதை  கள் தேர்தலின்போது உங்களை அவசியம் சந்திக்க வருவோம் நோய்த்தொற்றென்பது நாங்களில்லை என்பதை  இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள் வருகிறோம் சமூகப் பரவல் தொடங்கிவிட்டதா  என ஆராய வேண்டும்.
Image
ஒரு விண்மீனாய்ப் பாவித்துக்கொள் இப்பொழுதுகளிலெல்லாம்  உன்னைக் காண்பது முடியாதாகிவிட்டது வீட்டிற்குள் என்னோடு உன்னையும்  பூட்டிக்கொண்டு தவிக்கிறேன்  முட்டைக்குள்ளிருக்கும் உயிரைப்போல இருளிலிலும் ஒளியிலும்  உன் ஞாபகம் மட்டுமே உயிர்த்துக்கிடக்கிறது யாரோ கட்டளையிடுகிறார்கள் என்னையும் உன்னையும்  தனிமைப்படுத்திக் கொள்ளுங்களென்று என்னாலும் உன்னாலும் முடியாதென்று  அவர்களுக்குத் தெரிவதில்லை அவர்களுக்கு நாம் வேண்டுமென்பது நிஜமல்ல அவர்களை நிரூபித்துக்கொள்ளும்  சந்தர்ப்பத்திற்காய் நம்மை இறைஞ்சுகிறார்கள் நாம் முக்கியமென்று பொய் உரைக்கிறார்கள் உயிர் பறிக்கும் கொடிய நோய்க்காலம்  நம்மை நம் காதலை பயத்தில் சாய்த்துவிட்டது வெளியே போகாதே வீட்டினுள் இரு  என்ற அறைகூவல் எல்லாத் திசைகளிலிருந்தும்  தொடர்ந்து ஒலிக்கிறது நான் ஒரு தொலைவிலும்  நீ ஒரு தொலைவிலுமிருக்கிறோம் இங்கோ ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே இருக்கிறார்கள் நானோ உன்னை ஆகாசத்தில்  ஒளிரும் விண்மீனில் ஒன்றாய்க் காணத் தொடங்கிவிட்டேன் ...
Image
ஒரு பறவையைப் போல இறக்கைகள்  கோடை வெயிலில் பழக்காரனின் கூடையில்  பழங்கள் வெம்பிச் சுருங்குவதைப் போல  என் மனம் உன்னைக் காணாத இந்த மதியத்திலிருக்கிறது நன்கு கனிந்த பழத்தைப் போல  உன்னை ருசித்திருந்த நாட்கள் எங்கேயோ போய்விட்டன நரகம் நம்மைச் சூழ்ந்த காலத்தில்  நீயும் நானும் பிரிந்திருக்கும் சாபத்தைப் பெற்றிருக்கிறோம் தொடரும் இந்தக் கொடூரமான விதியில்  நாம் தப்பிப் பிழைத்துவிடுவோமா அன்பே கட்டளைக்கு கீழ்பணிந்த நாம்  அடிமைகளைப் போல காதலைத்  துறந்துவிட்டோம் ஒரு பறவையைப் போல இறக்கைகள்  நமக்கு இருந்திருக்கலாம் நீயும் நானும் யாருமற்ற வெளியில்  ஒரு மரத்தின் கிளையில் சுகித்துக் கிடந்திருக்கலாம் எதற்கும் வாய்ப்பற்ற பூமியில் தனித்தனியே இருந்து  துடித்து மடிவதைத் தவிர வேறென்ன செய்துவிட முடியும் நரக வேதனையில் உழன்று தவிக்கும்  இந்தக் காலத்தை உன் நினைவின் வழியே  கடப்பதைவிடவும் வேறொன்றுமில்லை அவர்களோ முடிவை மாற்றிக்கொண்டே போகிறார்கள் நாம் நகர மறுக்கும் கணங்களில் உயிர்த்து மடிந்து  உயிர்த்து மடிந்துகொண்டிருக்கிறோம்...
Image
மெதுமெதுவாய்க் கலைகிறேன் உன் அருகாமையில் கங்காருவின் மடியில்  இருப்பதைப் போன்ற ஓர் உணர்வு விதை வெடித்துக் கிளம்பும்  ஒரு தாவரத்தின் மென்மை உன் விரல்களில் யாருமற்ற இரவில் உன்னுடன் மட்டுமே  உரையாடும் சொற்களில் ததும்பும் தாபம் உலகத்தில் நீயும் நானுமே இருப்பதான  அபூர்வ பிரக்ஞையில் நம் காதல் குளிர்ந்த கடலென  நம்மை நனைத்துப்போகிறது உன் கண்களில் ஒளிரும் நட்சத்திரங்களில்  நமக்கான இரவை ஒளியேற்றுகிறாய் உன் முழு உடலும் நான் சுவைக்கப் போகும்  அதிசயக்கனி போல ஜொலிக்கிறது உன்னைத் தோலுரித்து ருசிக்கும்வேளை  உன் விரக வேதனையின் ஒலி  என் காமத்தில் நுழைந்து வெறியேற்றும் அதோ அந்த நிலவும் வெட்கித் தலைகுனிகிறது உன் ஆடைகளை மெதுமெதுவாய்க் கலைகிறேன் நீயென்பதும் நானென்பதும் தொலைகிறது அன்பே.
Image
நரகத்தின் வாசல் எல்லாம் முடிந்துவிட்டதாக நினைத்துக்கொண்டார்கள் இப்போதுதான் நரகத்தின் வாசல் திறந்துகொண்டிருக்கிறது உயிர்த்திருக்கும் யாவிலும் இறப்பின் நிழல் படர்கிறது ஒவ்வொரு மலராய் காற்று வீழ்த்தும் பொழுதுகள் தொடங்கிவிட்டன இனி மிஞ்சப்போவது நீயோ நானோ அல்ல ஆதியிலிருந்த நிலம் மீளும் கடலும் ஆகாயமும் அப்படியே இருக்கும் காற்றின் பாடலில் உயிரினங்கள் மகிழ்ந்திருக்கும் தீ தானகவே எரிந்து எரிந்து அணையும் கறைபடாத பூமியில் மனிதன் இருந்த சுவடுகள் முற்றிலும் மறைந்துவிடும் இரவு பகலின் அமைதியில்  விழித்திருக்கும் உலகின் அழகு ஒளிரும் காலம் .
Image
தூய்மைக்குத் திரும்பும் நிலம் மனிதர்களில்லாத பூமியின் மெளனம் எத்தனை அழகானது அங்கு ஒலி மரித்துக்கிடக்கிறது நகரம் பூமிக்கடியில் புதையுண்ட சவப்பெட்டிபோல நிச்சலனத்தில் உறைந்துவிட்டது நான் என்னை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்னுள் எத்தணை நான் என வியப்பில் வீழ்கிறேன் மனிதன் தோன்றுவதற்கு முன் இருந்த பூகோளத்தில் இருப்பதான வெளியில் சஞ்சரித்திருக்கிறேன் இறந்த உயிரினங்கள் உயிர்த்துவிட்டன போலும் புத்தம் புது புள்ளினங்கள் இசைக்கின்றன நட்சத்திரங்களின் புதிய ஒளியில் விழிகள் ஒளிர்கின்றன நிலவின் பிரகாசம் எப்போதையும் விட  வெண்மையில் பூத்திருக்கிறது பரிதி பகலை வெளிச்சத்தில் மிளிரச் செய்கிறது யாருமற்ற கடல் மீன்களின் துள்ளல்களில் ஆழ்ந்த களிப்பில் அலைகளோடு பேசுகிறது தூய்மைக்குத் திரும்பும் நிலத்தில் மறுபடி மனிதன் வந்துவிடப் போகிறான் நடுங்கும் இதயத்தில் பயந்த உலகில் தனித்திருக்கும் நான் புத்துயிர்க்கும் இயற்கையில் யாரும் என் பூட்டிய கதவைத் தட்ட வேண்டாம்.
Image
ரகசியக் கதறல் யாரோ துரத்துகிறார்களோ போய்க்கொண்டே இருக்கிறேன் எப்போது பிடிபடுவேன் யாரும் சொல்லவில்லையே பிடிபட்டுவிடுவேன் சர்க்கஸ்கூடாரத்தின் விலங்கைப்போல என் ரகசியக் கதறலை நான் மட்டும் அறிந்தவனாயிருக்கிறேன் என்னிடம் வரவில்லை யாரும் என் கூக்குரல் எவன் காதுகளுக்கும் எட்டவில்லை போலும் எதையும் செய்ய வெளியேறாதே வீட்டிற்குள் இரு யாரோ சொல்கிறார்கள் என் தொலைவுகள் முடங்கிவிட்டது வீட்டில் சுவர்களில் ஒன்றாய் மாறிக்கொண்டிருக்கிறேன்.
Image
சொற்களால் என்ன செய்துவிட முடியும் பொழுதுகளெல்லாம் பெரும் பதற்றத்திலிருக்கின்றன அடுத்த கணத்தில் எத்தனை உயிர்கள் மடியுமோ எதிர்காலத்தை இறுக பற்றியிருக்கிறது அவநம்பிக்கை யாவரின் இதயமும் வழமையைவிட அதி வேகமாய்த் துடிக்கிறது அவளை மீண்டுமொருமுறை பார்க்க முடியுமா அவளுக்கான காதலை முத்தங்களில் சொல்ல இயலுமா இந்தத் துயர்மிகு காலத்தில்  அவளை அணைத்து ஆறுதல் சொல்ல  வழிகள் இருந்தும் மூடப்பட்டுவிட்டன அவள் கண்ணீர்க்குரல் சிதைத்துவிட்டது ஆழமாய் தொடுவுணர்வின்றி வெற்றுச் சொற்களால் என்ன செய்துவிட முடியும் சுவர்களுக்கிடையே அவள் ஞாபகம் கொல்லத் தொடங்கிவிட்டது ஆயிரமாயிரம் மனிதர்கள் செத்துவிழும் காலத்தில்  நீ பயந்துபோயிருக்கிறாய் உனக்கான பிரார்த்தனையில் நீ நலம் பெற்றிருக்கிறாய் அமையிதியில் விழித்திரு உன் கதவுகளைத் திறந்து அப்படியே வாரிக்கொள்வேன் அன்பே.