வீட்டிற்குள் வந்த பெரிய விட்டில் பூச்சி பயமுறுத்தியது போல தோன்றியது
கொல்வதாக காகிதத்தில் சுருட்டி எடுத்து போனேன்
உயிரைக் கொல்ல மனமில்லாமல் பறக்க விட்டேன்
காகிதச் சிறையிலிருந்து விடுபட்ட அது பறந்து மறைந்த வேகத்தில்
புரிந்துகொண்டேன்
உயிர் பிழைத்தல் எத்தனை அதிசயமானது என்று.
Comments
Post a Comment