நீண்ட நாட்கள் இந்த பூமியில்
இந்த மலர்கள் இருப்பதில்லை
நீர் கிடைத்து வாழும் வேளைகளில்
மொட்டாய் மெது மெதுவாய்
தான் அழகென்பது உணராமல்
மலரும் கணம் அறியாமல்
மறையும் கணம் அறியாமல் மலர்ந்து
குறுகிய காலமே வாழ்ந்து செல்லும்
இந்த வெள்ளந்தி மலர்போல்
என்னால் இருக்க முடிவதே இல்லை.

Comments

Popular posts from this blog