ஒரு குவளை நீர் நீ... மழை மேகங்களுடன் வந்திருந்தாய் ஊழிக்காற்றில் மரம் போல விழுந்த பொழுதில் தாங்கின உன் மெல்லிய கரங்கள் அநாதையிடம் தாய்மைபோல நெருங்கியிருந்தாய் பாலைவனத்தில் ஒரு குவளை நீரானாய் இணையிழந்த பறவையிடம் காதலியாகியிருந்தாய் இரவுகளின் வேட்கையை காதலால் பற்றிக்கொண்டாய் உன் கனிந்த இதயத்தால் தீராத் துயர்களைத் துடைத்தாய் அம்பு பாய்ந்த பட்சிக்கு கருணை மருந்திட்டாய் வலுப்பெற்ற சிறகுகளால் ஆகாயத்தைக்கூட கடந்தேன் ஸபரிசத்திலும் பாய்ச்சலில் புரளும் இரவுகளிலும் பிறந்துவிட்ட சிசுவைப்போல புத்துணர்ச்சி அடைந்தேன் இனி இல்லையென்றானது என் இலையுதிர்காலம்.
Popular posts from this blog
எங்கோ அகவும் மயிலின் தனிமையில் இரவு எதற்காகவுமின்றி விழித்திருக்கிறது இமை மூட மனமின்றி காத்திருக்கும் மனிதர்கள் எதையோ யோசித்துக் கொண்டிருப்பார்கள் அதில் எண்ணற்ற வேதனைகள் கவலைகள் இருக்கக்கூடும் இந்த பூமியில் எதற்காக என்று தெரியவில்லை யாரின் மீதும் எந்த நம்பிக்கையும் இருக்கவில்லை எல்லாம் பொய்யின் வடிவமாக நீடிக்கிறது எதிரில் இருப்பவன் நல்லவன் போல நடிக்கிறான் அது பேர் ஆபத்தானது ஒரு பெண்ணின் மீதான காதல் மட்டுமே வாழ்தலின் அர்த்தத்தை மெய்ப்பிக்கிறது வேறொன்றும் மற்ற மனிதர்களிடம் சாதித்துக் கொள்ள எதுவுமில்லை ஆகையால் உன்னிடம் மட்டுமே இருந்து கொள்ளுதல் சாலச் சிறந்தது அதை நீ புரிந்து கொள்கிறவேளையில் மரணம்கூட அற்புதமாக நடந்து விடும் அதற்காகவே தான் நீ எவ்வளவு என்னை சாடினும் உன்னைச் சுற்றி வருகிறேன் நீயோ தனிமையின் தீவிரத்தில் என்னை உதாசீனம் செய்கிறாய் அதை விட்டுவிடு யாவும் நலமாக ஈடேறும் அன்பே ...
ஆகாய வீதியில் மஞ்சு பொதிகள் அமைதியில் உறைந்திருக்கின்றன தனிமையில் இருக்கும் உன்னைப்போலவே என் இருப்பின் இடையே இருள் அமர்ந்திருக்கிறது என்னைப்போலவே நீயும் நானும் தனித்தனியே நம்மை நினைத்தபடி நினைவுகளால் இணைந்திருக்கிறோம் இதுவே காதலின் உன்னதம் காற்றில் அசையும் மரங்களில் உன் குரலின் இசையை அறிகிறேன் அது பேரானந்தத்தின் தொடக்கம் என்னை உன்னிடம் அனுமதிக்காத காலத்தில் வார்த்தைகளின் வழியே உன்னைத் தொட்டு உணரும் சக்தியை கவிஞனாய்ப் பெற்றிருக்கிறேன் உன் படுக்கையின் மீது நீ மட்டும் இல்லை நானும் இருக்கிறேன் என்பது எத்தனை அழகானது நித்திரையில் எல்லா இரவுகளும் நான் மட்டுமே கனவாய் வந்து கொண்டிருப்பேன் அதை நீ சொல்லாவிடினும் அறிந்து கொள்வேன் அதுவே நம் காதலின் மகத்துவம் கனத்த இருட்டில் ஒளி தரும் கற்பனையில் வடிவான உன்னில் இப்போது முத்தமிட தொடங்கிவிட்டேன் மிகப்பெரிய வானம் என்னுடன் இருக்கிறது உன்னைப் போலவே அன்பே ....

Comments
Post a Comment